ஹட்டன் நகரில் எதிர்காலத்தில் இனி புதிய மதுபானசாலைகளை அனுமதிப்பதில்லையென ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் சபை நேற்று (15) கூடியபோது, தீர்மானம் ஒன்றை முன்வைத்த சுயேச்சை குழு உறுப்பினர் எஸ்.கேசவமூர்த்தியின் கோரிக்கையை சபைத்தலைவர் உட்பட ஏனைய அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக மனதாக வரவேற்றனர்.

நகர சபைத்தலைவர் உட்பட ஏனைய அனைத்து உறுப்பினர்களும் இக்கருத்துகளை ஏற்றுக்கொள்வதாக கூறியதையடுத்து இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது. மேற்படி தீர்மானமானது நோர்வூட் பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கும் அனுப்பி வைக்கப்படும் என சபைத்தலைவரால் கூறப்பட்டது.








