Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருநாகலில் 8 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தவர்கள் கைது

குருநாகலில் 8 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தவர்கள் கைது

10 months ago
in செய்திகள்

குருநாகலில் நீண்ட காலமாக வசித்து வந்த, 2 கர்ப்பிணி நாய்கள் உட்பட 8 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏரி சுற்றுவட்ட பகுதியில் வசிக்கும் ஒரு பிரபல வர்த்தகர் மற்றும் ஒரு குழு அளித்த முறைப்பாடு தொடர்பாக, பொலிஸாரால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல், குடியிருப்பாளர்களிடமிருந்து அன்பையும் பராமரிப்பையும் பெற்று வந்த நாய்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

விலங்கு நல சங்கங்களும் இது தொடர்பாக தங்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

கைது செய்ய கோரப்பட்ட 2 சந்தேக நபர்களும் ஏரி சுற்றுவட்ட பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் வசிக்கும் இரண்டு சகோதரர்களாகும்.

அவர்கள் சட்டவிரோதமாக கால்நடைகளைக் கடத்துபவர்கள் எனவும் இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 13 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களும், எட்டு நாய்களுக்கு விஷம் கலந்த மாட்டிறைச்சித் துண்டுகளை உணவாகக் கொடுத்து கொன்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் அந்த காட்சிகளில் அவர்கள் இறைச்சித் துண்டுகளை நாய்களுக்கு எப்படி உணவாகக் கொடுக்கிறார்கள் என்பதையும், அவற்றை உண்ணும் நாய்கள் வலியால் உயிரிழக்கின்றது என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

அந்த பகுதியில் உள்ள காணிகளில் இரவில் தாங்கள் கொண்டு வரும் மாடுகளை இருவரும் சட்டவிரோதமாக அனுமதியின்றி வைத்திருப்பதாகவும், அதன் போது நாய்கள் தொந்தரவு செய்ததால் அவற்றை விஷம் வைத்து கொன்றிருக்கலாம் எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
Next Post
மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இலக்கத் தகடு

மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இலக்கத் தகடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.