1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்களின் உடல்கள் மண்டைதீவு பகுதியில் உள்ள சில கிணறுகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவே சபை உறுப்பினர் பிரகலாதன் சபை அமர்வில் தெரிவித்தார். எனவே, இப்புதைகுழி அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

செம்மணி புதைகுழி விவகாரத்துடன் ஒப்பிடக்கூடிய இந்த குற்றச்சாட்டு தேர்தல் அரசியல் பேசுபொருளாக மட்டுமே இருக்காமல், உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்கள் அனுசியா ஜெயகாந்த், பார்த்தீபன் மற்றும் கருணாகரன் நாவலன் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த ஆதாரங்களுடன் துறைசார் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப சபை தீர்மானித்துள்ளது.








