பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் ஐந்து இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கடவத்தை பகுதியிலுள்ள விடுதியொன்றில் மறைந்திருந்தபோதே கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி இரவு குறித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.








