வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லியவத்தை, மட்டக்குளிய பாலம் அருகிலுள்ள விழா மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, குழந்தை ஒருவரின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து வத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








