2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று (24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூன்றாம் தவணையின் முதலாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (27) முதல் ஆரம்பமாகவுள்ளன.
அதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஜூலை 31 ஆம் திகதி நிறைவடையும் என்றும், அவற்றின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஓகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை தவணை அட்டவணைக்கு அமைவாக அனைத்து கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








