காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் காஸாவில் ஒரு சில வாரங்களில் உணவுப் பற்றாக்குறையால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 289 ஆக உயர்ந்துள்ளதாகவும் இவர்களில் 115 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா உட்பட பிற உணவு விநியோக முறைகளை முற்றிலுமாக துண்டித்து, அதன் சொந்த நான்கு மையங்களை இஸ்ரேல் திறந்ததையடுத்து இந்த மையத்தை நோக்கி உணவுக்காக வந்த 2,076 பேரை இஸ்ரேலிய இராணுவம் இதுவரை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (24) காஸா முழுவதும் நடந்த தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதில் உணவுக்காக காத்திருந்த 22 பேர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸை தோற்கடிக்க இஸ்ரேல் தனது பாரிய தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, இதுவரை 62,686 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 157,951 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








