Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான்”; பாஜக எம்.பி அனுராக் தாகூர்

“விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான்”; பாஜக எம்.பி அனுராக் தாகூர்

11 months ago
in உலக செய்திகள், செய்திகள்

தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர், இந்தியாவின் விண்வெளி சாதனைகளையும், பாரம்பரிய அறிவையும் இணைத்து பேசினார். “விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான். நமது புராணங்களில், அனுமன் சூரியனை நோக்கி பறந்து சென்று அதைப் பழமாக எண்ணி பிடிக்க முயன்றார். இது நமது பாரம்பரிய அறிவின் ஆழத்தை காட்டுகிறது,” என்று கூறினார்.

இந்திய புராணங்களில் அறிவியல் சிந்தனை இருப்பதாகவும், இதை பாடப் புத்தகங்களுக்கு அப்பால் தேடி அறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.அனுராக் தாகூர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சாதனைகளைப் பாராட்டினார். “2023 ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது, இந்தியாவை உலகில் முதல் நாடாக மாற்றியது.

இது இஸ்ரோவின் திறமையையும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் விண்வெளி பயணத்தின் முன்னேற்றத்தையும் காட்டுகிறது,” என்று குறிப்பிட்டார். மேலும், ஆதித்யா L1 சூரிய ஆய்வு மற்றும் ககன்யான் திட்டம் போன்ற இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களையும் அவர் புகழ்ந்தார்.“நமது பாரம்பரியம், கலாச்சாரம், மற்றும் அறிவை பாடப் புத்தகங்களுக்கு அப்பால் தேட வேண்டும். நமது புராணங்களில் அறிவியல் சிந்தனைகள் மறைந்துள்ளன. 5-ஆம் நூற்றாண்டில் ஆர்யபட்டர் பூஜ்ஜியத்தைக் கண்டறிந்து, பூமி சூரியனைச் சுற்றுவதாகக் கூறினார். இது நமது முன்னோர்களின் அறிவியல் பார்வையை எடுத்துக்காட்டுகிறது,” என்று அனுராக் தாகூர் கூறினார்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு, பாரம்பரிய அறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் கலவையாக இருப்பதாகவும், இது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.அவர் மேலும், “2014-க்கு முன் இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், வரம்புக்குட்பட்டதாகவும் இருந்தன. ஆனால், பிரதமர் மோடியின் சீர்திருத்தங்களால், தனியார் துறை மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோ புதிய உயரங்களை எட்டியுள்ளது,” என்று குறிப்பிட்டார். இந்தியாவின் விண்வெளி துறையில் பெண்களின் பங்களிப்பையும், இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதையும் அவர் பாராட்டினார்.

இது பற்றி பேசிய அவர் “இந்தியாவின் விண்வெளி கதை, மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, நிலவையும் தொட்டுள்ளது,” என்று அவர் முடித்தார்.இந்த உரை, இந்தியாவின் விண்வெளி சாதனைகளை பாரம்பரிய அறிவுடன் இணைத்து, இளைஞர்களை உற்சாகப்படுத்துவதற்கும், தேசிய பெருமையை வெளிப்படுத்துவதற்கும் முயற்சியாக அமைந்தது. இருப்பினும், அனுமன் குறித்த அவரது கருத்து சில விவாதங்களை தூண்டியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
Next Post
ரணிலின் நிலை பற்றி கேள்வி எழுப்பிய மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள்

ரணிலின் நிலை பற்றி கேள்வி எழுப்பிய மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.