குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட சாலை விபத்தில் பாடசாலை வேன் ஒன்றும், லொறியும் நேருக்கு நேர் மோதி மோதியதில், வேன் சாரதி மற்றும் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 13 மாணவர்கள் அவசரமாக குளியாப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










