திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் படுகாயம் அடைந்து மூதூர் தள வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துச் சம்பவம் நேற்று புதன்கிழமை (27) இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு -வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








