மட்டக்களப்பு நகரின் முதலியார் சின்னலெப்பை வீதியில் அமைந்துள்ள வடிகானில் கழிவுநீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் வடிகானில் குவிந்து கிடப்பதால் நீர் சரியாக ஓடாமல் தேங்கி, வீதிக்கு வெளிவருகிறது. இதனால் பாதசாரிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், வடிகானில் மரங்கள் வளர்ந்து வருவதோடு தேங்கி நிற்கும் கழிவுநீர் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கி வருகிறது.

இந்த பிரச்சினையைப் பற்றிய தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடியிருப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“வடிகான்களை சுத்தம் செய்து துர்நாற்றத்தை அகற்றுவார்களா? மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?” என பொதுமக்கள் கேள்வி எழுப்பி அதிகாரிகளின் அவசர தலையீட்டை கோரியுள்ளனர்.










