பல ஆண்டுகளாக படகுகள் கட்ட முடியாத நிலையில் இருந்து வந்த வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம், விரைவில் புதிய கட்டுமான பணிகளை காண உள்ளது.
1000 மில்லியன் ரூபாய் நிதியில், அடுத்தாண்டு முதல் வாழைச்சேனை துறைமுக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் நேற்று (09) நடைபெற்ற பாராளுமன்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் தனது நேரத்தில் சுட்டிக்காட்டிய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தமைக்கு ஜனாதிபதி அனுரகுமார மற்றும் அமைச்சரவைக்கு நன்றியை தெரிவித்தார்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கிழக்கு மாகாண மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த வசதிகளை பெறுவார்கள் எனவும், கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய பங்களிப்பாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.









