விளக்கமறியலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சினை இருப்பதாகவும் நித்திரையின் போது ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் நேற்று (12) தெரிவித்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் குறித்த நோய் நிலைமைகளைக் கவனத்தில் கொண்டும் அவரை பிணையில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தைக் கோரியிருந்த போதும் பிணையில் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
இதன்படி, சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








