Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மணல் அகழ்வு மற்றும் வாள்வெட்டு தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

மணல் அகழ்வு மற்றும் வாள்வெட்டு தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

9 months ago
in செய்திகள்

யாழ். பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் சந்திரசேகர், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் சகிதம் கற்கோவளம் பகுதிக்கு இன்று (17) சென்றிருந்தார்.

குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலால் மீன்வாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், மீனவர்கள் மீதான வாள்வெட்டு தாக்குதல் பற்றியும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இது பற்றி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக அதிகாரிகள் சகிதம் அமைச்சர் அங்கு விரைந்திருந்தார்.

மீனவர்கள் மற்றும் மக்களிடம் கலந்துரையாடி, நடந்தவற்றை கேட்டறிந்து – அவை பற்றி பொலிஸாரிடம் எடுத்துரைத்தார். பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகள் ஊடாகவே மக்களுக்கு அமைச்சர் தெளிவுபடுத்த வைத்தார்.

அத்துடன், சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றுக்கு நிச்சயம் முடிவு கட்டப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

தீவக பகுதிகளில் காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சிதான் நடக்கும் என்பதை வன்முறை கும்பல்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் பிடிக்குள் இருந்து தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது எனவும் அமைச்சர் மக்களிடம் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் சுகநலம் விசாரித்த அமைச்சர், மீன்வர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் இடித்துரைத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

June 11, 2026
அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

June 11, 2026
உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

June 11, 2026
கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!
செய்திகள்

கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!

June 11, 2026
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு
செய்திகள்

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு

June 11, 2026
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
செய்திகள்

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

June 11, 2026
Next Post
சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.