இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் பலஸ்தீனை இன்று (21) அதிகாரப்பூர்வமாக ஒரு சுயாதீன நாடாக அங்கீகரித்துள்ளன. பிரதமர்கள் கியர் ஸ்டார்மர் (UK), மார்க் கார்னி (கனடா), ஆந்தனி அல்பனீஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இந்த முடிவானது, இரு நாடுகள் தீர்வு (Two-State Solution) குறித்த சர்வதேச அழுத்தத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, எதிர்கால பலஸ்தீன அரசில் ஹமாஸ் பங்கு இருக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.

இதே நேரத்தில், காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 55 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 37 பேர் காசா நகரிலேயே உயிரிழந்துள்ளதாக அல்ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இந்த அங்கீகாரத்தை கடுமையாக எதிர்த்து, இது பிராந்திய அமைதிக்கு உகந்ததல்ல என தெரிவித்துள்ளன. அதேசமயம், பல நாடுகள் பலஸ்தீனை அங்கீகரிக்கும் சர்வதேச போக்கு வலுப்பெறுவது, இஸ்ரேல்–பலஸ்தீன மோதலில் புதிய சவால்களையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.








