கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் பகுதியாக, இலங்கை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ், மட்டக்களப்பு ரோட்டரி ஹெரிடேஜ் கழகம் சிறுவர்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க மற்றும் நோய்த்தாற்றுக்களில் இருந்து பாதுகாக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிரமதான பணிகளை முன்னெடுத்து வருகிறது.
அந்த நோக்கில், மட்டக்களப்பில் சிறுவர்கள் விளையாடும் பகுதிகளை தூய்மையாகவும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத இடமாகவும் வைப்பதற்காக, மட்டக்களப்பு டென்னிஸ் விளையாட்டு மைதானத்தையும் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இச்சிறப்பு சிரமதான பணியில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.















