காவல்துறை மா அதிபரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் கடிதம் முற்றிலும் தவறானது மற்றும் சோடிக்கப்பட்டதாகும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட காவல்துறை ஊடகப் பிரிவு, இதனைத் தெரிவித்துள்ளது.
இணையப் பயன்பாட்டுடன் தொடர்புடைய பாலியல் வெளிப்படையான நடத்தையில் சிறார்களை சித்தரிக்கும் பொருட்களைப் பார்ப்பது, வைத்திருப்பது, பரப்புவது, விநியோகிப்பது அல்லது தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கைது செய்யுமாறு, சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு காவல்துறை மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளதாகக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், காவல்துறை மாஅதிபர் அல்லது காவல் துறையின் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட பிரிவோ அத்தகைய கடிதத்தை வெளியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், போலியான ஆவணங்களைப் பரப்புதல், சமூகத்திற்குத் தவறான தகவல்களை வழங்குவது மட்டுமல்லாமல், தண்டனைக்குரிய குற்றம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.








