வாகரை கலாச்சார மண்டபத்தில் நேற்று (22) மாலை, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரன் தலைமையில் உள்ளூராட்சி வார இறுதி பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், “வளமான நாடும் அழகான வாழ்க்கையும் – மறுமலர்ச்சி நகரம்” என்ற தொணிப்பொருளில் 2025 செப்டம்பர் 15 முதல் 21 வரை பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையொட்டி கல்வியில் சாதனை படைத்த மாணவர்களும், கிராமிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திருமதி க. அமலினி, மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி எம். ஆர். இப்கா ஷபீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.
























