கிண்ணியாவைச் சேர்ந்த 5 வயது மாணவன் அக்லான் பிலால், உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட Mental Math World Cup (MMWC) 2025 ஆன்லைன் போட்டியில் சிறப்பான சாதனை படைத்துள்ளார்.
57 நாடுகளிலிருந்து 8,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற போட்டியில், அக்லான் இறுதி சுற்றுக்கு முன்னேறி, 100 மனக்கணிதக் கேள்விகளுக்கான விடைகளை வெறும் 4 நிமிடம் 23 விநாடிகளில் முடித்து 1000 மதிப்பெண்களை பெற்றார். இதன் மூலம் இலங்கை அளவில் முதல் இடத்தையும், உலகளவில் 15ஆம் இடத்தையும் பெற்றார்.
கிண்ணியா Challenger பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் அக்லான், ஏற்கனவே உலகச் சாதனைப் புத்தகத்தில் இரண்டு முறை இடம்பிடித்துள்ளார். Law of exponents மற்றும் large digit numbers தொடர்பான விளக்கங்களை வழங்கிய முதலாவது சிறுவனாகவும் அவர் பெயர் பெற்றார்.
இதற்காக, அவருக்கு “Little Scientist of Kinniya” என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.










