அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று (25) வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மாத்தறை விளையாட்டு அரங்கில் 22–25ம் திகதிகளில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில்,
சர்மிளா – பெண்கள் 49–53 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம்,
டிலக்சன் – ஆண்கள் 54–58 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
இவர்களை கௌரவிக்கும் வகையில், மலர் மாலை அணிவித்து ஊர்வலமாக பாடசாலை வரை அழைத்து வரப்பட்டு, பெற்றோரின் கரங்களால் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், கடந்த ஆண்டு இதே போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற டிஸ்காவும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.
அதிபர் தர்மரெட்ணம் கிருஷ்ணகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.















