சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்திற்கு முன்பு இன்று (29) காலை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சின்னக்குளம், இத்திக்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நடைபவணியாக வந்து மூதூர் நீர் வழங்கல் காரியாலயத்திற்கு முன்பு இவ் கவனயீர்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னக்குளம், இத்திக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த கால யுத்தத்தில் இடம் பெயர்ந்து 2008 ஆண்டில் மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இரண்டு கிராமங்களிலும் 247 குடும்பங்கள் வாழ்கின்றனர். எனினும் இதுவரை இவர்களுக்கு சுத்தமான குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்படவில்லை. எனவே தமது கிராமங்களுக்கான குடிநீர் இணைப்பை புதிய அரசாங்கம் வழங்க வேண்டுமென வழியுறுத்தியே இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.










