இரத்தினபுரி, இறக்குவானை பகுதியில் சுமார் 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இதர பொருட்களைத் திருடிச் சென்ற பெண்ணைக் கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இறக்குவானை, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், தமது வீட்டிலிருந்து தங்க நகைகள் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டதாகக் கடந்த ஓகஸ்ட் மாதம் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

இது தொடர்பில் காவல்துறை நடத்திய விசாரணையில், குறித்த வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்த பெண்ணொருவரே இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பின்னர் சந்தேக நபரான அந்தப் பெண் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான (படத்தில் உள்ள) இந்தப் பெண் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், 071-8591394 அல்லது 071-8593808 என்ற இலக்கத்துக்கு அறியத்தருமாறு காவல்துறையினர் பொதுமக்கள் கோரியுள்ளனர்.








