அரசாங்கம் மறைமுகமாக இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு முனைவைத்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,
இந்த அரசாங்கம் அடுத்த ஆறு மாத காலத்தில் இலங்கைக்கு வர இருக்கும் மேலதிக விமானங்களை வரவேண்டாம் என்று தடுத்திருக்கின்றது. இதற்கான காரணம் பண்டாரயநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு தற்போது வரும் விமானங்களை விட மேலதிக விமானங்கள் வருவதற்கு இடமில்லை வந்தால் திருப்பி அனுப்ப வேண்டிய நிலை வரும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.
இது எவ்வளவு ஒரு மறைமுக இனவாதம் என்று பாருங்கள். வடக்கிலே பலாலி விமான நிலையம் இருக்கின்றது. மத்தளை விமான நிலையமும் இருக்கின்றது. மத்தளையிலே அவர்கள் விமானத்தை இறக்குவதற்கு விரும்பவில்லை. இந்த விமானங்களிலே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை விடுத்து மற்றையவர்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கிலே வசிக்கும் வெளிநாட்டு வாழ் பிரஜைகளாகவே இருப்பார்கள்.

இந்தப் புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் மக்கள் மத்தளைக்குச் சென்று, மத்தளையில் இருந்து 20 மணித்தியாளங்கள் பஸ் பயணம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். எனவே பலாலி விமான நிலையத்தைப் புனரமைப்புச் செய்தால் மேலதிக விமானங்களை அங்கே இறக்க முடியும்.
இவ்வாறானதொரு தூரநோக்குப் பார்வையுடன் நாங்கள் ஒரு தனி அரசாக தமிழரசுக் கட்சி சில யோசனைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கட்டியழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றேம். இதன் காரணமாகத்தான் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். அப்போதுதான் இந்த விடயங்களை நாங்களே கையாளக் கூடிய சூழலுக்கு வரலாம்.
இந்த நிலைமைகளில் இந்த அரசானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக் கூறல் விடயத்திலும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம், துரோகம், நல்லிணக்கம் சம்மந்தமான விடயத்திலும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம், துரோகம் மாற்றும் பொருளாதாரம் சம்மந்தப்பட்ட விடயத்திலும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம், துரோகமே இளைத்துள்ளது என்று தெரிவித்தார்.








