கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப்பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் வண்டி மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதி தன்னாமுனையில் இன்று அதிகாலை 04.45 மணியளவில் பாதையை விட்டு விலகி அருகிலுள்ள கடைகளுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானது.
பஸ் வண்டிக்கும் கடைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சாரதியின் தூக்க விபத்துக்கான காரணம் எனத்தெரிவிக்கப்படுகின்றது.

தெய்வாதீனமாக இவ்விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், பஸ்ஸில் பயணித்த சிலர் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








