ஏப்ரல் தாக்குதலுக்கான சூழ்ச்சிகளுக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானுக்கும் தொடர்புகள் இருப்பதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கணடவாறு கூறியுள்ளார்.
ஏப்ரல் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்புகள் இருப்பதாகத் தான் ஏற்கனவே கூறியுள்ளேன்.
ஆனால், அவருக்கு நேரடியான தொடர்புகள் இருப்பதாகவும் அவரே தாக்குதலை நடத்தியதாகவும் தான் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலை சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் நடத்தியதை அனைவரும் அறிவார்கள்.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கான சூழ்ச்சிகளுடன் பிள்ளையானுக்கு தொடர்பு இருக்கின்றது.
அதற்மைய, இந்தத் தாக்குதலுக்கு யார் ஆதரவு வழங்கியது, இதற்குப் பின்னால் யார் இருக்கின்றது என்பதையே நாம் கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுவொரு சூழ்ச்சி என்பது அனைவருக்கும் தெரியும்.
இதற்குப் பின்னால் அரசியல் தொடர்புகள் இருக்கின்றதா என்பதையே நாம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதேவேளை, ரக்பி வீரரான தாஜூதீன் கொலை வழக்கிலும் திருப்பு முனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.








