வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பிரயாணித்த கடற்படையின் கனகர வாகனம், வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி ஒருவர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு மோதிய விபத்தில், ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதியான கடற்படை வீரரை கைது செய்துள்ளதாகவும் வாகனத்தை தடுத்து வைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
கல்லடி கடற்படை தளத்திற்கு சொந்தமான கனகர வாகனம் வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி சம்பவதினமான நேற்று இரவு 10.30 மணியளவில் பிரயாணத்துக் கொண்ட நிலையில் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து குறித்த வாகனத்தின் சாரதியான கடற்படை வீரரை கைது செய்ததுடன், வாகனத்தை தடுத்து வைத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








