Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு பறிக்கப்பட்டமையின் பின்னனியில் போதைப்பொருள் விவகாரமா?; மொட்டு கேள்வி

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு பறிக்கப்பட்டமையின் பின்னனியில் போதைப்பொருள் விவகாரமா?; மொட்டு கேள்வி

10 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போதைப்பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவ்வாறெனில் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு நீக்கப்பட்டமை தான் அந்த நடவடிக்கையா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் ஒரு முக்கிய விடயமாகும். இதற்கு முன்னர் எமது அரசாங்கங்கள் இருந்தபோது அமைச்சரவை மாற்றங்களைச் செய்தபோது, அது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும், கேலியான கருத்துக்களையும் கூறிய ஜே.வி.பி.யினருக்கு இன்று அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலங்களில் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஜே.வி.பி. கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தது. அதனால் அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களை நியமித்து அமைச்சரவையை அமைப்பதாக கூறினார்கள்.

ஆனால், அவர்கள் கொடுத்த அந்த வாக்குறுதியையும் இப்போது அவர்களே மீறி, புதிய அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் நியமிக்க நேரிட்டமை எண்ணி கவலையடைகின்றோம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையகத்தில் கடந்த நல்லாட்சிக் காலத்தில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு கட்டப்பட்டிருந்த சில வீடுகள் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கு இந்த போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முதல் படி எடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

ஆனால் எமக்குத் தெரியவரும் முதல் படி என்னவென்றால், பிமல் ரத்நாயக்க துறைமுக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைதான்.

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமைக்கும் நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை மிகவும் ஆழமாக ஆராய வேண்டியது கட்டாயமாகும். எவ்வாறிருப்பினும் இலங்கை வரலாற்றில் இதுவரை செய்யப்பட்ட மிகப் பெரிய மோசடிச் செயல் இது என்பதை நாம் மக்களிடம் தெரிவிக்கின்றோம்.

அதேபோல், இந்தக் கொள்கலன்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முதலில் முறைப்பாடு செய்த டான் பிரியசாத் சில நாட்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், எமது சட்டத்தரணிகள் சங்கம் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளது. அந்த முறைப்பாடு தொடர்பாக இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொலிஸாருக்கு குற்றங்கள் என்றால் என்ன? தங்கள் கடமை என்ன? என்பது மறந்துவிட்டது. பொலிஸ்மா அதிபரே நீங்கள் இன்னொரு பூஜித் ஜயசுந்தரவாக மாற முயற்சிக்க வேண்டாம். அவர் இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார். இன்னொரு பொலிஸ்மா அதிபர் சிறையில் துன்பப்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.