தனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தான் இலங்கை வர தயார் என அசாத் மௌலானா என்றழைக்கப்படும் ஹன்சீர் முஹம்மத் தெரிவித்துள்ளதாக ஐபிசி தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அசாத் மௌலானா ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பிரத்தியேக குரல்பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு புலனாய்வு அதிகாரியாக இருந்த எம்.ஐ கலீல்தான் முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும்,
இதையடுத்து எம்.ஐ கலீலை வெளிநாட்டுக்கு அனுப்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிள்ளையானால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவரும் பிள்ளையானும் துபாயில் ரோவினுடைய முக்கிய அதிகாகரிகளை சந்தித்தாகவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.








