மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் இருந்து மீன்பிடி இலாகா வீதி வழியாக மகரகம என்ற கடைக்கு செல்லும் வழியில், அணிந்து சென்ற தங்க நகை ஒன்று தவறுதலாக தவறவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (20) மாலை 6:15 – 7:00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தங்க நகை உரிமையாளர் நகையை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோரியுள்ளார்.
அந்த அடிப்படையில் தவறவிட்ட நபர் குறிப்பிட்ட நேரத்தில் அந்த வீதியில் உள்ள கடை மற்றும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சிசிடிவி கேமராவின் ஊடாக குறிப்பிட்ட நேரத்தில் பரிசோதித்து பார்க்குமாறும்
மற்றும் புகைப்படத்தில் காட்டப்படும் நகையை யாராவது பார்த்திருந்தால் அல்லது எடுத்திருந்தால் (0772708414/ 0762207093) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை நகை கடை உரிமையாளர்களிடம் புகைப்படத்தில் உள்ளவாறு நகை விற்பனைக்காக வந்தால் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து உதவி செய்யுமாறும் கோரியுள்ளார்.
இது தொடர்பில் காத்தன்குடி பொலிசில் முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.









