ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி சீர்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற துணைக்குழுவின் கூட்டத்தில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கல்வி முறையின் தரத்தை மேம்படுத்துவதையும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.









