வானிலை அதிகாரி K..சூரியகுமார்
அராபிக் கடலில் நிலை கொண்டிருக்கின்ற காற்று சுழற்சியானது சற்று வலுவடைந்து வடக்கு-வட கிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (24) பாகிஸ்தான் மற்றும் குஜராத் கரையோரத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இன்றைய தினம் அந்தமான் கடல் பிராந்தியத்தில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது போல் அது என்று உருவாகி உள்ளது.
இது தற்போது இலங்கையின் வடகிழக்காக வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பிராந்தியத்தில் குறைந்த தாழமுக்க பகுதியாக உருவாகியுள்ளது.

இது நாளைய தினம் தற்போது ஆந்திரா கரையோரம் நீடித்துக் கொண்டிருக்கும் காற்று சுழற்சியுடன் ஒன்றிணைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சற்று வலுவடைந்து, பின்னர் தமிழ்நாட்டின் கரையை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணத்தினால் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதை வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலும் நாளை முதல் இரண்டு மூன்று தினங்களுக்கு மழைக்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.








