அம்பாறை மாவட்டத்தில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் அக்டோபர் 22, 2025 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைசார் மேற்பார்வை குழு கூட்டத்தில் இது தொடர்பில் அவர் சுட்டிக்காட்டினார்.

இளைஞர் குழுவினரின் தவறான தகவல் சேகரிப்பால் பல ஏழை குடும்பங்கள் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழிகாட்டல் வழங்கி அநீதி இழைத்த மக்களை மீண்டும் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
இதற்கு பதிலளித்த உலக வங்கி திட்டமிடல் பணிப்பாளர், விரைவில் அதிகாரிகளுக்கான வழிகாட்டல் மற்றும் பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.








