Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் வழமை நிலைக்கு

கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் வழமை நிலைக்கு

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறவுள்ளதாக நிந்தவூர் காதி நீதிமன்ற நீதிபதியும், கல்முனை பதில் காதி நீதிபதியுமான எம்.ஐ.எம். இல்யாஸ் அறிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்று (27) முதல் ஒவ்வொரு கிழமையும் தினந்தோறும் திங்கள், வியாழன் வரை காலை 9 மணி முதல் 12 மணி வரை கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் அலுவலகத்தில் தற்காலிகமாக இயங்க ஆரம்பித்துள்ளது.

எனவே தேவையை நாடும் பொதுமக்கள் கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகளை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பினை வழங்குமாறும் அறிவித்துள்ளார்.

கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் நீண்ட காலமாக முடங்கிய நிலையில் காணப்பட்டதுடன் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 01.03.2023 ஆம் திகதி சிரேஷ்ட சட்டத்தரணியும், அகில இலங்கை சமாதான நீதிபதியுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2025 ஆகஸ்ட் 18 ஆம் திகதி மாலை கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியான அவரும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது சுமார் கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் 2 மாத காலமாக முடங்கி காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.

காதி நீதிமன்றம் என்பது இஸ்லாமிய தனியார் சட்டத்தின் கீழ் திருமண, விவாகரத்து மற்றும் குடும்ப விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாகும்.இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதியாக காதி நீதிமன்றங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கடும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
செய்திகள்

கடும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

June 10, 2026
வயிற்றுக்குள் வெடித்த ஐஸ் போதைப்பொருள்; பேருந்து சாரதி உயிரிழப்பு
செய்திகள்

வயிற்றுக்குள் வெடித்த ஐஸ் போதைப்பொருள்; பேருந்து சாரதி உயிரிழப்பு

June 10, 2026
போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை அதிகரிப்பு
செய்திகள்

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை அதிகரிப்பு

June 10, 2026
பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம்
செய்திகள்

பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம்

June 10, 2026
சலேவுக்கு ஆதரவான சத்தியாகிரகப் போராட்டம் இடைநிறுத்தம்
செய்திகள்

சலேவுக்கு ஆதரவான சத்தியாகிரகப் போராட்டம் இடைநிறுத்தம்

June 10, 2026
சரத் வீரவன்சவுக்கு வெளிநாட்டு பயணத் தடை
செய்திகள்

சரத் வீரவன்சவுக்கு வெளிநாட்டு பயணத் தடை

June 10, 2026
Next Post
மறைந்த சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட 4 இல்லங்கள் மேல் நீதிமன்றமாக மாறுகின்றன

மறைந்த சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட 4 இல்லங்கள் மேல் நீதிமன்றமாக மாறுகின்றன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.