புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பிரதீபா 2025 ன் தேசிய மட்டப் போட்டியானது கடந்த 26.10.2020 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயா பாடசாலையில் நடைபெற்றது.
இதில் எமது மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் பின்வரும் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1.சூழலை அழகுப்படுத்தும் பறவைகளின் செயற்பாடு – நடனம் 1ம் இடம்
2.கோலாட்டம்- குழு பெண்கள் 1ம் இடம்
3.தில்லானா – ஆண் தனி 1ம் இடம்
4.மேலைத்தேய இசை – வாத்தியம் குழு 1ம் இடம்
5.சடங்கு இசைப் பாடல் குழு – 1ம் இடம்
6.கடம் தனி – 1ம் இடம்
7.மிருதங்கம் தனி -1ம் இடம்
8.ஜதீஸ்வரம் தனி பெண் – 2ம் இடம்
9.தோடயமங்களம் – குழு – 2ம் இடம்
10.விளையாட்டு வீடு- குழு நடனம் – 2ம் இடம்
11.பெண் – தனி இசை- 2ம் இடம்
ஆகிய இடங்களை பெற்று மட்டக்களப்பு மண்ணுக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர்.
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தில் பதிவு செய்த மாணவ, மாணவியர்களே இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி திருமதி அமலினி ரஞ்சித்குமார் அம்மணி அவர்களின் வழி காட்டலின் கீழ் நடன வளவாளர் திருமதி V.பிரேம நந்தினி அவர்களதும், மிருதங்க வளவாளர் திரு.N.குகன் அவர்களதும், இசை வளவாளர் திரு S.நரேந்திரா அவர்களதும், வயலின் வளவாளர் N.சாரங்கி அவர்களதும் மேலைத்தேய இசை பயிற்றுவிப்பாளர் F.ஜூட் திலீபன் ஆகியோரது நெறிப்படுத்தலிலும் இந்த வெற்றிகளை அடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்












மற்றும் அவர்களை தயார்படுத்திய வளவாளர்கள்

மண் முனை வடக்கு கலாசார மத்திய நிலைய
பொறுப்பதிகாரையும் நடன ஆசிரியரும்.

மிருதங்க வளவாளர் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

கர்நாடக சங்கீத வளவாளர்
மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

நடன வளவாளர்
மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

பிரான்சிஸ் ஜுட் திலீபன்

வயலின் வளவாளர்
மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

புல்லாங்குழல் இசைக் கலைஞர்

வீணை இசைக் கலைஞர்

பக்கப்பாட்டுக் கலைஞர்








