உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட பெண் ஒருவர் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
அந்தப் பெண், தாம் பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் சகோதரி என்று அடையாளப்படுத்தி, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றமை குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

எனினும், பொலிஸ் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியது முற்றிலும் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அத்தகைய எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் பொலிஸ் ஊடக பிரிவு விளக்கமளித்துள்ளது.








