திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் நேற்று (02) துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த கோவில் மற்றும் ஒரு கொள்கலன் கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக் காலமாக குறித்த துறைமுகத்தில் இருந்து மன்னார் நோக்கி காற்றாலை எடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.












