Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் யானைகளின் அட்டகாசம்; ஆர்ப்பாட்டம் செய்யும் தவிசாளர்!

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் யானைகளின் அட்டகாசம்; ஆர்ப்பாட்டம் செய்யும் தவிசாளர்!

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவரும் நிலையில் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் ஏறாவூர் பற்று தவிசாளருக்கு விடுத்த கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் ஏறாவூர் பற்று தவிசாளர் அதற்கு தீர்வை வழங்குவதற்கு பதிலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் நாளாந்தம் யானைகளின் தாக்குதலினால் பொது மக்கள்,விவசாயிகளின் உயிர்கள் பறிபோவதோடு பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்படும் நிலையில் அரசியலுக்காக தவிசாளர் ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியானதா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உடனடி தீர்வாக தவிசாளர் தனது தலைமையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை அழைத்துத்துக் கொண்டு யானைகளை விரட்டி அடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவேண்டும்.
நீண்ட கால தீர்வாக யானை வேலி அமைத்தல் உட்பட யானைகள் வராமல் தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.

ஒரு பிரதேசத்தின் குட்டி ஜனாதிபதி என்று வர்ணிக்கப்படும் தவிசாளர் பதவியை வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முயற்சிக்காது .மக்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வதால் யானைகள் ஓடிவிடுமா?

ஒரு அரச திணைக்களத்தின் தலைவர் அரச அதிகாரிகளோடு இணைந்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர மக்களோடு சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய கூடாது.

மக்கள் தான் தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமே தவிர பொறுப்பு கூற வேண்டிய இடத்தில் இருக்கும் தவிசாளர் அரச கொடுப்பனவையும், அரசின் உள்ளூராட்சி சபை தவிசாளர் என்ற பதவியை வைத்துக் கொண்டு எவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது? இது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.

தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு தீர்வை வழங்காது அரசியலுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் இவர்களிடம் பதவிகளை கொடுத்தால் மக்களின் நிலை இவ்வாறு அமையும் எனவும் அரசியல் ஆர்வலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு இதுதான் நிலை என்றால் என்றால். இதற்கு யார் பொறுப்பு?

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது
செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

June 21, 2026
லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்
உலக செய்திகள்

லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்

June 21, 2026
டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
Next Post
தலாவயில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி; பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்

தலாவயில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி; பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.