முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கில் பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட முதற்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (10) நிராகரித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனையை மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் நிராகரித்து, வழக்கைத் தொடர உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி குறித்த வழக்கை டிசம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.








