மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவை அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளுக்கான அலுவலக முகாமைத்துவம், உற்பத்தித் திறன் செயற்பாடுகள் மற்றும் நிதிப் பிரமாணங்கள் தொடர்பான பயிற்சி நெறி நேற்று முன்தினம் (13) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி நெறி பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில், நிர்வாக அதிகாரி திரு வே. தவேந்திரன் அவர்களின் தலைமையில் அமர்த்தப்பட்டது.
நிகழ்வில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலக கணக்காளர் திரு S. சுந்தரலிங்கம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து, முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினர்.
என்பது கிராம சேவை அதிகாரிகளும் அபிவிருத்தி அதிகாரிகளும் செய்முறை அறிவு மற்றும் அலுவலக திறன் மேம்பாட்டிற்கு இப்பயிற்சி நெறி பயனுள்ளதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




















