வாழைச்சேனை, பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் இன்று (17) காலை அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கடலில் சடலம் மிதந்து வருவதை அவதானித்த பிரதேச மீனவர்கள், உடனடியாக கல்குடா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதுவரை சடலம் யாருடையது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.








