இந்தியாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் திருமணமொன்றுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திருமணத்துக்கு சரியாக ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் மணமகன் மணமகளை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதிகள் இருவருக்கும் திருமண புடவை தொடர்பில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து திருமண செலவுகள் மற்றும் பணம் தொடர்பிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மணமகன் இரும்புக் கம்பியால் மணமகளை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மணமகள் உயிரிழந்துள்ளார்.
மணமகன் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மணப்பெண்ணின் உடலை எடுத்துச்சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற மணமகனை பொலிஸார் தேடி வருகின்றனர்.








