மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை பகுதியில் 5000பனை விதைகளை நடும் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
முறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் தற்சார்பு பொருளாதார நிலைமையினை நம்பிவாழும் யானை-மனிதன் மோதல் நடைபெறும் பகுதி மற்றும் சிறுகுளங்களை அண்மித்த பகுதிகள் என பல இடங்களில் இந்த பனை விதைகள் நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இம்மாதம் மாவீரர்களை நினைவுகூரும் மாதம் என்பதை முன்னிட்டு இந்த மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.



மறத்தமிழர் கட்சியின் இணைப்பாளர் ந.குணசிவரூபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், பிரதேச பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உன்னிச்சை 06ம் கட்டைப் பகுதியில் களிக்குளத்தை அண்டிய பிரதேசத்தில் பனை விதைகள் நடப்பட்டன.
எதிர்வரும் கார்த்திகை 27ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








