யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று (18) இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததாகவும் அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்துள்ளது.

வீடு திரும்பாததால் தேடியபோது, வீட்டின் அருகே உள்ள வீதியில் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணை தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்








