கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பிரயாணித்த குழுவொன்று மினுவான்கொடை பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த உணவகம் ஒன்றில் உண்பதற்காக கொள்வனவு செய்த பிரைட் ரைஸ் உணவில் புழு நெளிந்த சம்பவம் இன்று (19) பதிவாகியுள்ளது.
குறித்த குழுவினர் இதுதொடர்பில் மினுவான்கொடை பகுதிக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
அதேசமயம் குறித்த உணவகம், அந்த வீதியை பயன்படுத்தும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் உணவகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.








