பாராளுமன்ற மேற்பார்வை குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள்,சிவில் செயற்பாட்டாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வு நேற்று (19) மட்டக்களப்பில் நடைபெற்றது.
மாகா ஆய்வு நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கிறீன்கார்டன் ஹோட்டலில் இந்த செயலமர்வு நடைபெற்றது.




கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களில் கடமையாற்றும் தொடர்பாடல் பிரிவு உத்தியோகத்தர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற மேற்பார்வை குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.
மாகா ஆய்வு நிலையத்தின் இணைப்பாளர் ஜே.எம்.அஷார் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் ஊவாக சக்தி நிலையத்தின் பணிப்பாளர் நடேசன் சுரேஸ் பிரதான வளவாளராக கலந்துகொண்டு விளக்கமளித்தார்.








