Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாலை மரியாதை இல்லாமல் மக்களுக்கு பணியாற்ற முடியாது?; நிலாந்தனின் பிரேரணையை தள்ளுபடி செய்த செங்கலடி தவிசாளர்!

மாலை மரியாதை இல்லாமல் மக்களுக்கு பணியாற்ற முடியாது?; நிலாந்தனின் பிரேரணையை தள்ளுபடி செய்த செங்கலடி தவிசாளர்!

7 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் மாலை, மரியாதை கௌரவிப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பிரயோகித்து அதனை தவிசாளர் தள்ளுபடி செய்தார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் மாலை மரியாதை கௌரவிப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தளவாய் செங்கலடி வட்டார உறுப்பினர் செ.நிலாந்தன் கொண்டுவந்த பிரேரணைக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், NPP உறுப்பினர்கள் , மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தவிசாளர் குறித்த பிரேரணையை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி நீக்குவதாக தெரிவித்தார்.

மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக மக்களிடம் இருந்தோ அல்லது பொது அமைப்புகளிடம் இருந்தோ மாலை, மரியாதைகளை பெறுவது இலஞ்சம் பெறுவதற்கு ஒப்பானது என்றும், வீதிகள் உட்பட ஒப்பந்த காரர்களால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களில் ஒப்பந்த காரர்கள்,அரச அதிகாரிகளுக்கோ அல்லது அரசியல் வாதிகளுக்கோ மாலை மரியாதை செய்வது ஒப்பந்தகாரர்களிடம் இருந்து சலுகைகளை பெறுவதை போன்றது.

எனவே முன் உதாரணமாக ஏறாவூர் பற்று பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் போது மாலை மரியாதைகளை தடை செய்யுமாறு பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் குறித்த பிரேரணையை இன்றைய தினம் (20) கொட்டுவந்திருந்தார்.

ஆனால் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பணவு முதல் சிற்றூண்டி வரை மக்கள் வரிப்பணத்திலே வழங்கப்படுவதால் மாலை மரியாதை கௌரவிப்புகளை தடை செய்ய முடியாது என கூறிய தவிசாளர் குறித்த பிரேரணையை தள்ளிப்படி செய்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மாலை மரியாதைகளுக்காகவா அரச அதிகாரிகளும், பிரதேச சபை உறுப்பினர்களும் பணியாற்றுகின்றனர், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள், மக்களின் பணத்தில் செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக மாலை மரியாதை வேண்டும் என்று கூறுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
இடியும் மின்னலும் அதிகரிக்கும் சாத்தியம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இடியும் மின்னலும் அதிகரிக்கும் சாத்தியம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.