மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயமான மாவடி வேம்பு சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் கண்ணப்ப குரு சுவாமி அவர்களின் நல்லாசிகளுடன் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் (23) நடைபெற உள்ளது.
இவ் மஹா கும்பாபிஷேக நிகழ்வானது18 அடி உயரமுள்ள கருப்பண்ண சுவாமி அருவாள் மகா விஷ்ணு சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பாக நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வில் முதல் நிகழ்வாக வெள்ளிக்கிழமையன்று (21) கருமாரம்பம் கிரியை இடம்பெற உள்ளது.
நாளை (22) எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற உள்ளது.ஞாயிற்றுக்கிழமை சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து சுவாமிகளுக்கு விசேட பூஜைகள் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை சிறப்பிக்கும் முகமாக சூப்பர் சிங்கர் விஜய் டிவி புகழ் பாடகி செல்வி அபிராமி நாகராஜன் தேவகோட்டை தமிழ்நாடு இந்தியாவை சேர்ந்த அவர்களின் வெண்கல குரல் இசையில் ஐயப்ப சுவாமியின் பஜனை இசை இடம் பெற உள்ளது.
அடியார்கள் அனைவரும் ஆலயம் வருகை தந்து ஐயனின் திருவருளை பெற்று செல்லுமாறு தேவஸ்தான நிர்வாக சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.








