இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று (23) இடம்பெற்றது.
இந்தநிலையில் இறுதி சுற்றுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகரான சுகிர்தராஜா சபேசனும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தற்போது அவர், போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இந்தநிலையில், அவருக்கு சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து இலங்கை வாழ் மக்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சரிகமப Grand finale வில் ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்கள் பங்கு பற்றி இருந்தார்கள். அதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கிடைத்த பரிசுக்களின் விபரம் பார்க்கலாம்.
- தங்கமயில் யுவல்லரி வழங்கும் 5லட்சம் மதிப்புள்ள தங்கம் கோல்டன் வாய்ஸ் People’s Choice இந்த பரிசை பெற்றவர் பவித்ரா.
- 2nt runerup தங்கமயில் யுவல்லரி வழங்கும் 3லட்சம் மதிப்புள்ள தங்கம் இதை வெற்றி பெற்றவர் சின்னு செந்தமிழன்.
- 1st runner up இலங்கையை சேர்ந்த சபேஷன் இவருக்கு 10 லட்சம் பணப்பரிசு கிடைத்துள்ளது.
- Title Winner M.P. Developers வழங்கும் 60 லட்சம் மதிப்புடைய வீடு பரிசு சுஷாந்திக்காவிற்கு கிடைத்தது.









