சீரற்ற காலநிலை காரணமாக பெய்துவரும் அடை மழையினையடுத்த ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை (27) வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதேசமயம் கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு நேற்று புதன்கிழமை தொடக்கம் எதிர்வரும் (30) ஆம் திகதி வரை விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் முகாமையாளர் ஜெயவதனன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாண அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடரான மழை மற்றும் வான் கதவுகள் திறந்ததினால் ஏற்பட்ட வெள்ளை நிலமை காரணமாக கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகள் அனைத்தும் இம்மாதம் 30 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.








