நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான சுனில் ஹந்துன் நெத்தி, அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் சகிதம் நேரடி கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
சித்தாண்டி, கிண்ணையடி ,மிராவோடை போன்ற பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

இதன் போது தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அமைச்சருடன் தெரிவித்தனர்.
இடைத்தங்கள் முகாம்களின் உள்ள மக்களுக்கான உரிய அடிப்படை வசதிகள் மற்றும் சமைத்த உணவு வழங்குதல் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அவற்றில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் செயற்பாட்டில் அமைச்சர் ஈடுபட்டு இருந்தார் .








